ஆரியம் திராவிடம் உண்மை

12 Nov 2011


ஆரியம் திராவிடம் பிரச்சனை எங்கு ஆரம்பிக்கிறது. மதத்தில் மெய்பொருளை மறைத்து மூட நம்பிக்கையை மையப்படுத்தி வாழும் இனத்தாலும் வடமொழியை நுழைத்து தமிழை சீர்குலைப்பவர்களாலும் இந்த பிரச்சனை ஆரம்பிக்கிறது. ஆனால் உண்மை நிலவரம் என்ன என்று ஆராய்வோமானால் ஆங்கில அரசு இந்தியாவிலிருந்து பல கருவூலங்களை களவாடிக்கொண்டு சென்றது. பூஜ்யம் செங்கோண முக்கோணம் சார்ந்த தேற்றம் போன்ற கணிதவியல் தத்துவங்கள், சதுரங்கம் மல்யுத்தம் போன்ற விளையாட்டுகள். புஷபகவிமான (ஆகாய விமான வடிவமைப்பு)  சாஸ்திரம் இயந்திர சாஸ்திரம் போன்ற இயந்திரவியல் நூல்கள்  தனுர் சாஸ்திரம் போன்ற போர்கருவிகள் பயன்படுத்தும் உத்திகளை கொண்ட நூல்கள். ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் தொடர்பான நூல்கள் வானவியல் சாத்திரங்கள் மற்றும் கோகினூர் வைரம் பொன்னாலான சிலைகள் முத்து பவளம் போன்ற ஆபரணங்கள் உள்ளிட்ட  பலவற்றை பத்திரபடுத்தி எடுத்து சென்றது. (இன்று வரையுமே இந்த களவாடல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது) பின்பு பின்பு மொகலாய மன்னர்களால் எஞ்சிய தடயங்கள் சூரையாடப்பட்டன. இந்த திருட்டுத்தனத்தை மறைக்க ஆங்கில அரசு மிகப்பெரும் வலையை பின்னியது. அதுதான் இந்தியர்களிடையே பிரிவினைவாதத்தை உருவாக்குவது. அக்பர் சக்கரவர்த்தியால் அதர்வண வேதத்தின் கூறுகள் அதர்வண வேதத்தில் திறமைசாலியான அந்தணன் ஒருவனை சிறைபிடித்து மொகலாயர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டது.  மறைத்து வைக்கப்பட்ட அதர்வண வேதத்தின் கூறுகள் மொகலாயர்கள் வழியாக புதிய தோற்றமாக வெளிப்பட்டது. இதனை புதிய கலாசாரமாக சித்தரித்து ஆங்கில அரசு உருவாக்கியது. அதாவது மாக்ஸ்முல்லர் எனும் ஆராய்ச்சியாளனை  வைத்து ஆரியர்கள் ஆப்கனிஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தார்கள். இந்தியர்களுக்கு பாரம்பரியம் வெளியிலிருந்து வந்தது என்பது தான் அது. இங்கு நாம் சிந்திக்க வேண்டிய விடயம் உணவு உடை கலாசாரம் என்று எதிலுமே பக்குவமற்ற நிலையில் இந்தியாவுக்கு வெளியில் இருந்தவர்கள். எப்படி சாத்திரம் பண்பாடு எல்லாவற்றிலும் தேர்ந்த ஆரியர்களாக இந்தியாவுக்குள் நுழைந்திருக்க முடியும். ஆக ஆரியர்களும் இந்தியர்களே தமிழ் நாட்டிலேயே கோவை மக்களும் சென்னை மக்களும் ஒன்று போல் இருப்பதில்லை அப்படி இருக்கும் போது அகண்ட பாரதத்தில் வாழ்வியல் மற்றும் கலாச்சார மாற்றம் ஏற்படுவது இயல்புதானே.  ராமரை ஆரியராக சித்தரித்து சைவ வைணவ பிரிவினை வெறியாளர்களால் தனது கருத்தை வலுவூட்டிகொண்ட ஆங்கில அரசு மேலும் ஒரு சூனியம் வைத்தது மெக்காலே என்பவனை வைத்து கல்வித்திட்டம் உருவாக்கியது அதில் ஆரியன் பிரிவினைக் கொள்கையை நங்கூரமாகப் போட்டு இந்தியா முழுவதும் பரப்பியது. வாஸ்கோடகாமா கள்ளி கோட்டையை கண்டுபிடித்தார் என்றும் அவர் தென் ஆப்பிரிக்காவின் முனைக்கு நன்னம்ம்பிக்கை முனை என்று பெயரிட்டார் என்று எல்லாம் படித்த நாம் ரோமாபுரி வரை சென்று வந்திருந்த பாண்டியர்கள் பாதை வரைபடங்களை பயன்படுத்திய நம்மவர்கள்  தென்னாப்பிரிக்காவில் முத்துகளையும் வாசனை பொருட்களையும் விற்பனை செய்து கொண்டிருந்ததை கண்ட வாஸ்கோடகாமாவுக்கு இந்தியாவை கண்டு பிடிக்கும் நம்பிக்கை பிறந்ததையும் நம்மவர்களை தொடர்ந்து வந்தே இந்தியாவை கண்டுபிடித்தார் என்ற செய்தியையும் அறியாமல் ஒரு வரலாறு படித்தோம் இதுதான் மெக்காலே கல்வி முறையின் கேடு. இது போன்ற உண்மை வரலாறு மறைக்கப்பட்டதால் தானே மேற்கத்திய நாகரிகமும் அந்த மொழியும் உயர்வாய் போனது. ஆக நாம் மாக்ஸ்முல்லர் கொள்கையையும் அழிக்கவில்லை மெக்காலே கல்வியையும் அழிக்கவில்லை நாமே சண்டையிட்டு கொண்டு நாமே குற்றம் கூறிக்கொண்டு திரிகிறோம். அவன் இன்றும் வருகிறான் நமது சாத்திரங்களை தோண்டி தான் கண்டுபிடித்ததாக பட்டயம்(pattern) வாங்கி விடுகிறான். நாம் அவனுக்கு வேலைகாரனாகிறோம். நாம் செய்ய வேண்டியது மூட நம்பிகையாக தோன்றும் சாத்திரங்களை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும். அறிவியல் பூர்வமாக தோன்றும் சாத்திரங்களை ஆராயவேண்டும். இரண்டாவது வடமொழியை ஒரே அடியாக ஆரியமொழி என்று சொல்லி வெறுத்து விமர்சிப்பதை விட்டுவிட்டு நாம் பயன்படுத்தும் மொழியிலேயே ஏராளாமான வடமொழி சொற்கள் உள்ளன அவற்றை மாற்றும் வரை நாம் அவற்றை கருவேப்பிலை போல பயன்படுத்தியே ஆகவேண்டும். ஆக விமர்சிப்பவர்கள் விமர்சிப்பதை விட்டு அந்த சொற்களுக்கு உரிய தமிழ் சொற்களை தமிழர்களுக்கு பரப்பினால் நன்றாக இருக்கும். மேலும்  வடமொழி கிட்டத்தட்ட அழிந்தே போய்விட்டது. வடமொழிக்கு நிகரான தமிழ் சொற்கள் பயன்பாட்டை அதிகரிக்கவேண்டும். இங்கு அகராதியில் வார்த்தை இருக்கிறது ஆனால் பயன்படுத்துகிறோமா என்பதே சிந்திக்க வேண்டியது.  மேலும் நாமே  அழித்து கொண்டிருக்கிற தமிழ் நூல்களை தேடி எடுத்து பதிப்பிக்கும் வழியை பார்க்கவேண்டும் நாம் செய்ய வேண்டிய காரியங்களே நிறைய இருக்கின்றன வெறுமனே திராவிடம் தமிழினம் என்று கத்தி கொண்டு இருந்தால் போதாது நாம் செயல் வீரர்களாக வேண்டும் தமிழினத்தை மேம்படுத்த பல செயல்கள் வரிசையில் இருக்கின்றன. இரண்டாவது இந்துமதம் ஆரியம் எனவும் சைவம் திராவிடம் என்பது சிலர் கூற்று. இந்தியாவின் மதம் சைவ சமயமே ராமரும் சிவ வழிபாடு செய்திருக்கிறார். சிவன் என்பது பராபரம் அதாவது பல ஆயிரம் வருடங்களுக்கு பின் ஆவியானவர் என்றும் அல்லா என்றும்  பெயரிடப்பட்ட உண்மை கடவுள். லிங்கம் என்பது தாரணை செய்வதற்கான ஒரு ஊடகம் பின்பு அது உருவழிபாடு ஆகிப்போனது வேறு. மாக்ஸ்முல்லர் தந்து ஆரிய கூற்றுக்கு முன் வைக்கும் சிந்து சமவெளி தடயங்களும் சிவ வழிபாட்டை உறுதி செய்கின்றன. ஆக ஆரியமும் சைவமே. ரிக் வேதத்தின் இறை தேடலுக்கான மந்திரங்களும் சிவ  வழிபாட்டை குறிப்பதாகவே உள்ளன. உலகியலுக்கான வழிபாட்டு மந்திரங்களில் தேவர்கள் சிலரை பராபரத்தின் அளவுக்கு ஏற்றி சொன்னதால் குழப்பம் நேரிட்டது. ஆனால் ஆரியர்கள் இந்தியர்களே. சித்தர்கள் முக்திக்கு சாதனமாக மந்திர, தந்திர, யந்திர, பயன்படுத்தும் முறையை கடைபிடிப்பவர்களை ஆரியர்கள் என்றனரே தவிர ஆரியர்கள் வெளியிலிருந்து வந்தவர்கள் அல்லர். இந்துமதம் என்பது உலக நாடுகள் வைத்த பெயர். ஏனெனில் நாம் மதத்திற்கு இந்துமதம் பெயரிடவேயில்லை. ஒரே ஒரு மார்க்கமாய் இருந்ததால் யாரும் பெயர் வைக்கவில்லை வேறு நாடுகளில் இறைதூதர்கள் தோன்றி புதிய மார்க்கம் உருவானபோது இந்தியாவில் பின்பற்றப்பட்ட மார்க்கத்துக்கு அவர்களுக்கு பெயர் தேவைப்பட்டது எனவே இந்து மதம் என்று பெயரிட்டனர். ஆக சைவநெறியே இந்து மதம் என்று பிற நாட்டவர்களால் அழைக்கப்பட்டது. வைணவம் என்றால் கிருஷ்ணர் உபதேசித்த கட்டளைகளை பின்பற்றுவோர் என்றும் சாக்தம் என்றால் ஆதிசங்கரர் கட்டளைகளை பின்பற்றுவோர் என்றும் அறியப்படுகிறதே தவிர இவை ஆரியர்களின்  தனி மார்க்கம் அல்ல. வேதம் என்பது வெளியிலிருந்து வந்தவர்களால் இயற்றப்பட்ட ஆரிய நூல் என்பதும் தவறு அது அட்டாங்க யோகத்தின் இயம நியமத்தை விரித்துரைக்கும் ஒரு பகுதியே. இன்னும் சரியாக சொன்னால் இறைதேடுவதற்கான சுத்தமான சைவநெறியை உரைத்த தமிழ் நூல்கள் திராவிடமாகவும்  உலகியல் வாழ்க்கைக்கான நெளிவு சுளிவுகளை கதையாகவும் புராணமாகவும் தத்துவமாகவும் விரித்து உரைத்த வடமொழி நூல்கள் ஆரியமாகவும் கருதப்படுகிறது.
ஆக ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று கூறுபவர்கள் இனிமேல் ஆரியம் திராவிடம் என்ற பிரிவினையை தூண்டும் சொல்லை பயன்படுத்தாமல் நேரடியாக மதத்தின் பெயரால் நடக்கும் மூடநம்பிக்கையை சாடுங்கள் வடமொழி பயன்பாட்டை சாடாமல் அதற்கு உரிய தமிழ் சொல்லை பயன்படுத்துமாறு அறிவுறுத்துங்கள்.

கட்டுரையின் பொருள் : ஆரியர்களும் திராவிடர்களும் இந்தியர்களே.
இதனை மறுப்பவர்களுக்கு கட்டுரையின் பொருள் : ஆரியர்களும் திராவிடர்களும் வேறு
  வேறு என்று நினைத்தால் மேலும் இந்த பிரிவினை வாதத்தை வலுப்படுத்தாமல் விமர்சனம் செய்வதைவிட்டு விட்டு கண்ணியமாக திராவிடம் (தமிழர்) மேம்பாட்டுக்கு செயல்படவும்

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு


8 comments:

  1. V.S.Janagan said...:

    அருமை மிக துல்லியமாக ஆராய்ந்து இந்த பதிவை மேட்கொண்டமைக்கு எம் நன்றியும் பாரட்டும்!!!

  1. தங்களின் எழுத்திற்கும்,முயச்சிக்கும் எனது பாராட்டுக்கள்.தங்களின் ஆய்வில் உண்மை உள்ளது.வாழ்த்துக்கள் நண்பரே!

    /சிவன் என்பது பராபரம் அதாவது பல ஆயிரம் வருடங்களுக்கு பின் ஆவியானவர் என்றும் அல்லா என்றும் பெயரிடப்பட்ட உண்மை கடவுள். லிங்கம் என்பது தாரணை செய்வதற்கான ஒரு ஊடகம் பின்பு அது உருவழிபாடு ஆகிப்போனது வேறு./ அருமையான விளக்கம்

  1. Jwaran Guna said...:

    திறமை வாய்ந்த ஆராய்ச்சி...நன்றி.....மென்மேலும் இது போன்ற ஆக்கங்கள் எதிர்பார்க்கப்படுகிற்து

  1. vijay said...:

    மிக சிறந்த கட்டுரை நண்பரே. நானும் இந்த ஆரிய திராவிட குழப்பத்திலிருந்து மீண்டுள்ளேன் என கூறலாம். மீண்டும் மீண்டும் வாசிக்க தோன்றுகிறது உங்கள் படைப்பாற்றல். நல்ல ஆராய்சி. தொடரட்டும் முயற்சி. நன்றி ~விஜயரத்தினம் மலேசியா

  1. harish said...:
    This comment has been removed by the author.
  1. ஆங்கிலேயர்கள் இந்தியா வருவதற்கு முன்பாகவே ஆகாயவிமானத்தை கண்டு பிடித்துவிட்டார்கள் அதில் எப்படி களவு நடந்தது.

  1. ஆயுதங்கள் எல்லாமே அவர்கள் இந்தியா வரும்போதே கொண்டுவந்தார்கள் அதில் எப்படி களவு நடந்தது

  1. இயந்திரங்கள் அவர்கள் கண்டுபிடித்த பிறகுதான் இந்தியா வந்தார்கள். கப்பல் விமானம் ரயில் ஆயுதம் அதாவது பொற்கருவிகள் இவை எல்லாம் இந்தியா வருமுன்னே அவர்கள் கண்டுபிடித்தது வரலாறை மறைத்து எழுதுகிறார் இவர்

Post a Comment

 
தமிழ் குடில் © 2011 | Designed by Tamilkudil