மேலும் எண்ணிலா சான்றோர்களையும் கண்டதும் நமது தமிழ் மண்தான். அமெரிக்க ஐரோப்பிய கண்டங்களில் ஆயிரம் ஆண்டு கால வரலாற்றை ஆராய்ந்தால் சான்றோர் என யாரையாவது தேடித்தான் சொல்லவேண்டியிருக்கும். இது தான் நம் தமிழ் மண்ணின் சிறப்பு. சான்றோர்கள் இப்படி தான் இருப்பார்கள் என சான்றோருக்கு உரிய குணங்களை நமது தமிழ் நூல்கள் பலவும் நமக்கு அள்ளிக்கொடுத்துவிட்டு போய் இருக்கின்றன. நாமும் அவைகளை பின்பற்றி மேல் நிலை நோக்கி நகர்ந்து நமக்கும் பிறருக்கும் நன்மையையும் இன்பத்தையும் அளிக்கும் வாழ்கையை வாழ முயற்சி செய்யலாம். நாம் சான்றோர் தானா என்று நம்மை நாமே கேட்டுகொண்டால் இல்லையென்ற பதில் பளிச் என்று வரும். நாம் ஒருவேளை சான்றோர் ஆகலாம் அல்லது ஆகாமலும் போகலாம் ஆனால் அந்த நிலையை நோக்கி நமது பயணத்தை தொடர்வதில் தவறில்லையே. நம் இலட்சியத்தை மரத்தின் உச்சியாக வைத்தால் நமது பயணம் புழுவை போன்று மெதுவாக இருக்கும். ஆனால் நம் இலட்சியத்தை வானமாக வைத்தால் நமது பயணம் கழுகை போன்று விரைவாக இருக்கும். வானத்தை அடையாவிடிலும் மலை உச்சியை எட்டும் சாத்தியம் உண்டு.
பொருட்பதம் எல்லாம் புரிந்து மேலோங்க
அருட்பதம் அளித்த அருட்பெருஞ்சோதி
அருட்பதம் அளித்த அருட்பெருஞ்சோதி
0 comments:
Post a Comment