திருசிற்றம்பலம்
சைவ உணவில் தாவரங்கள் ஒரு போதும் துன்புறுத்தப் படுவதில்லை. தாவரங்களின் இலை, கனிகளைப் பறிக்கும் போது அவற்றிற்கு வலி ஏற்படுவதாகவும் அவை துன்புறுவதாகவும் சிலர் கூறுகின்றனர்.
முற்றிலும் தவறான கூற்று இது வலி என்பது மூளை உள்ள பிராணிகளிடம் ஏற்படுவது. உடலின் ஒரு உறுப்பு தரும் அதிர்வுக்கு பதிலாக மூளை உண்டாக்கும்
மறு பதிலே வலி அல்லது இன்பமாக வெளிபடுத்தப்படும். மேலும் இதற்கு முக்கிய கருவியாக மனமே செயல்படும். மனதின் வழியாகவே உயிர்க்கு உணர்வாக அறிவிக்கப்படும். தாவரங்களில் இத்தகைய செயல்பாடு கிடையாது. ஒரு உறுப்பு தரும் அதிர்வை மட்டுமே வலி என்று கூற முடியாது. ஏனெனில் ஒரு கல்லை தட்டினாலும் கூட அதில் அதிர்வு உண்டாகும். அதை வலி என்று நிர்ணயம் செய்ய இயலாது.
மேலும் எந்த உறுப்புகள் துண்டிக்கப்பட்டால் வளர்கின்றனவோ அவை வலியை உண்டாக்காது. பல்லியின் வால். மனிதனுக்கு முடி, நகம் போன்றவை. இதைப் போலவே தாவரங்களுக்கு இலை, காய், கனி, வித்து முதலானவைகளும் எனவே தாவரங்களுக்கு நேரடியான துன்புறுதல் ஏதும் நிகழ்வதில்லை.
சைவ உணவே சைவ நெறியின் அடிப்படை அம்சம்.
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.
0 comments:
Post a Comment