பழங்காலத் தமிழர்கள் பகுத்து வைத்திருந்த பறவைகள் பட்டியலை ஒழுங்குபடுத்தி வெளியிடும் பணியை தமிழ்குடில் செய்து தொண்டிருக்கையில் பட்டியலை ஒழுங்குபடுத்துவதில் சில சிக்கல்களை சந்திக்க நேர்ந்தது. ஏனெனில் பழைய தமிழர்களால் பகுக்கப்பட்டவை
சில தெளிவில்லாத தோராயமான பகுப்புகளாகவும் குழப்பமாக
இருப்பதாகவும் தோற்றமளித்தது. ஆனால் தற்போதைய பகுப்புகள்அந்த முறையிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்ததையும் காண முடிந்தது. நம்முடைய பழைய பட்டியல் பகுப்புகளை தற்போதைய அறிவியல் பகுப்புகளுடன் இணைப்பதில் சில சிக்கல்கள் நேரிட்டது. எனவே தமிழர்கள் பயன்படுத்திய வகைப்பாடுகளின் கட்டமைப்பை நோக்கி ஆய்வு செய்தபோது வியப்பளிக்கும் தகவல்கள் கிடைத்தன. அதாவது தமிழரின் வகைபாடுகள் வலப்புற தொகுப்பு(Lateral categorization) முறையிலும் நவீன பகுப்புகள் தர்க்க ரீதியான பிரிப்பு (logical categorization) முறையிலும் இருப்பதை காணமுடிந்தது. வலப்புற தொகுப்பு முறை பற்றி இனி விரிவாய் காண்போம்.
சில தெளிவில்லாத தோராயமான பகுப்புகளாகவும் குழப்பமாக
இருப்பதாகவும் தோற்றமளித்தது. ஆனால் தற்போதைய பகுப்புகள்அந்த முறையிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்ததையும் காண முடிந்தது. நம்முடைய பழைய பட்டியல் பகுப்புகளை தற்போதைய அறிவியல் பகுப்புகளுடன் இணைப்பதில் சில சிக்கல்கள் நேரிட்டது. எனவே தமிழர்கள் பயன்படுத்திய வகைப்பாடுகளின் கட்டமைப்பை நோக்கி ஆய்வு செய்தபோது வியப்பளிக்கும் தகவல்கள் கிடைத்தன. அதாவது தமிழரின் வகைபாடுகள் வலப்புற தொகுப்பு(Lateral categorization) முறையிலும் நவீன பகுப்புகள் தர்க்க ரீதியான பிரிப்பு (logical categorization) முறையிலும் இருப்பதை காணமுடிந்தது. வலப்புற தொகுப்பு முறை பற்றி இனி விரிவாய் காண்போம்.
உலகின் வேறெந்த பகுதியிலும் துல்லியமாக பெயரிடப்படாத சில விசயங்களுக்கு தமிழில் மட்டுமே பெயர்கள் உண்டு. உதாரணமாக உடலுக்கு மேலே நான்கு உடல்கள் உள்ளதாகவும் மொத்தம் ஐந்து உடலுக்கும் ஐந்து வெவ்வேறு பெயர்கள் தமிழில் உண்டு. இது ஒரு நுணுக்கமான பகுப்பு. தனது துணையை விட்டுபிரிந்து இருக்கும் பெண்ணுக்கு உடலில் ஒரு விதமான ஹார்மோன்கள் சுரப்பதும் அதன் காரணமாக சோர்வு உண்டாவதும் மேலும் உடலில் ஒரு மெல்லிய பச்சை நிறம் படர்வதும் போன்ற அறிகுறிகள் தென்படும் அதற்கு தமிழில் பசலை என்று பெயரிட்டு இருப்பதையும் காணலாம். இந்த வகையான நுணுக்கமான பெயரிடல் முறைகள் உலகில் வேறெங்கும் இல்லை. மேலும் இதுபோன்ற நுண்ணிய விசயங்களை இப்போதுதான் விஞ்ஞானம் பொறுமையாக கண்டுபிடித்து கொண்டிருக்கிறது.
பெயர் என்பதற்கே உலகில் எந்த மொழியிலும் பெயரிடாத காலத்தில் தமிழில் அதற்கு பெயர் இருந்திருக்கிறது. தமிழின் பெயர் என்பதைக் குறிக்கும் நாமம் என்ற சொல்லிலிருந்தே Name என்ற ஆங்கிலசொல் உருவாக்கப்பட்டிருக்கிறது. தமிழில் இதே போன்ற நுண்ணிய பகுப்புகள் மற்றும் பெயரிடுதல் முறைகள் இருந்தாலும் சில விசயங்கள் நுண்மையாக பிரிக்கப்படாமல் தோராயமாகவே பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அதற்கும் காரணம் உண்டு ஏனெனில் உண்மையில் அவை வேறு ஒரு அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கின்றன. அதுதான் வலப்புற தொகுப்பு முறை. இந்த வலப்புற தொகுப்பு முறை முறை இயற்கையோடு இணைந்த ஒன்று எனவே முதலில் இயற்கையின் சூழ்நிலைத் தகவமைப்பு முறை பற்றி பார்ப்போம்.
பெயர் என்பதற்கே உலகில் எந்த மொழியிலும் பெயரிடாத காலத்தில் தமிழில் அதற்கு பெயர் இருந்திருக்கிறது. தமிழின் பெயர் என்பதைக் குறிக்கும் நாமம் என்ற சொல்லிலிருந்தே Name என்ற ஆங்கிலசொல் உருவாக்கப்பட்டிருக்கிறது. தமிழில் இதே போன்ற நுண்ணிய பகுப்புகள் மற்றும் பெயரிடுதல் முறைகள் இருந்தாலும் சில விசயங்கள் நுண்மையாக பிரிக்கப்படாமல் தோராயமாகவே பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அதற்கும் காரணம் உண்டு ஏனெனில் உண்மையில் அவை வேறு ஒரு அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கின்றன. அதுதான் வலப்புற தொகுப்பு முறை. இந்த வலப்புற தொகுப்பு முறை முறை இயற்கையோடு இணைந்த ஒன்று எனவே முதலில் இயற்கையின் சூழ்நிலைத் தகவமைப்பு முறை பற்றி பார்ப்போம்.
மடகாஸ்கர் தீவுகளில் இருக்கும் பல்வேறு வகையான உயிரினங்களை ஆராய்சியாளர்கள் அறிவியல் பெயரால் பகுத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த உயிரினங்கள் தோற்றத்தில் ஒருவகையிலும் அதனுடைய நடத்தையில் வேறு இனத்தையும் அதனுடைய இனப்பெருக்க முறையில் மற்றுமொரு இனத்தையும் பிரதிபலிப்பதாக இருக்கின்றன. உதாரணமாக பூனையைப் போன்ற உடலும் பூனையின் நடவடிக்கைகளையும் கொண்ட பூனையைப்போன்றே கத்தக்கூடிய கீரி இனம் ஒன்று இருக்கிறது. எலியைப்போன்று தோற்றமளிக்கும் ஒரு பிராணி கடலுக்குள் மூழ்கி சென்று நண்டுகளை உண்ணக்கூடியதாக இருக்கிறது. மேலும் தோற்றத்தில் தேவாங்கு போலவும், மரம் விட்டு மரம் தாவக்கூடிய குரங்கின் நடத்தையை ஒத்த ஒரு லெமூர் இனமும் இருக்கிறது. லெமூர் எனப்படும் இந்த வகையான இனங்களில் நான்கு மட்டுமே உண்டு என எல்லோரும் கருதிக்கொண்டிருக்க அண்மையில் ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர் ஒருவர் அவற்றை மரபணு சோதனைகளின் மூலம் 12 இனமாக பகுத்துக் காட்டினார். மேலும் இந்த லெமூர் இனங்கள் இரவில் நடமாடுவதால் ஆய்வாளர்களுக்கு தெளிவாக வகைப்படுத்த முடியவில்லை. இவைகள் எழுப்பும் சத்தம் ஒரேமாதிரியாக இருந்தாலும் ஒலியை பிரித்தறியும் கருவிகளைக் கொண்டே இவை வெவ்வேறு இனமாக பகுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த தீவில் காணப்படும் நூற்றுக்கணக்கான உயிரினங்களும் வெறும் நான்கு அல்லது ஐந்து இனங்களில் இருந்தே தோன்றியதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
சூழ்நிலைத்தகவமைப்பு என்பது எல்லா உயிர்களுக்கும் இயற்கையின் ஒரு வரப்பிரசாதம், இந்த சூழ்நிலைத்தகவமைப்பு வெறும் ஐந்து உயிரினங்களை எப்படி நூறு உயிரினங்களாக மாற்றியது தெரியுமா.
ஆப்பிரிக்காவின் வெப்பமண்டலத்திலிருந்து மடகாஸ்கர் தீவு இயற்கையின் சீற்றத்தால் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பிரிக்கப்பட்டபோது, அங்கு தோராயமாக வெறும் ஐந்து உயிரினங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டன. இந்த உயிரினங்கள் தாங்கள் வாழும் சூழ்நிலைக்கேற்ப தனது வாழ்க்கையை மாற்றிக்கொள்ள ஆரம்பித்தன. உதாரணமாக ஒரே இனம் வெவ்வேறு குழுக்களாக காடுகளிலும் நீர்நிலை அருகிலும் பாலை நிலங்களிலும் மலைப்பகுதிகளிலுமாக காலவெள்ளத்தில் பிரிந்தன. இவை தனது சூழ்நிலையில் கிடைக்கும் உணவுகளை கொண்டே உயிர்வாழும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டன. எனவே ஒவ்வொரு குழுக்களும் வெவ்வேறு உணவு, தட்பவெப்பநிலை இருப்பிடம் ஆகியவற்றுக்கேற்றவாறு பரிணாம வளர்ச்சி பெற்றன. உணவுக்காக மரத்தின் உச்சியில் சென்ற லெமூர் இனம் மரம் விட்டு மரம் தாவும் கலையைக் கற்றுக்கொண்டன. நீர்நிலைஅருகில் இருந்த இனம் நீருக்குள் மூழ்கி நீந்தக் கற்றுக்கொண்டன. இளநீரை பிரித்து உண்ணக்கூடிய இனத்திற்கு விரல்களும் நகங்களும் பெரிதாக வளர்ந்தன நாளடைவில் நிறம், தோற்றம், சப்தம், நடவடிக்கை ஆகிய அனைத்திலும் இவை முற்றிலுமாக மாறி பின்பு வேறு இனமாக மாறிவிட்டன.
உதாரணமாக இப்போது நாம் வீடுகளில் வளர்க்கும் பிராணி நாய் ஆனால் பலகோடி ஆண்டுகளுக்கு முன் நாய் என்ற இனம் இல்லை ஓநாய்கள்தான் நாளடைவில் நாய்களாக மாறியது. குகைகளை ஆதி மனிதன் தனக்கு சொந்தமாக்கிக் கொண்டபோது ,அவன் உண்டு எறிந்த மிச்சங்களை திண்பதற்காக ஓநாய்கள் வந்து போயின அவற்றை நாளடைவில் மனிதன் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து இறுதியில் இந்த ஓநாய்கள் தன்னுடைய இனத்திலிருந்து முற்றிலும் பிரிந்த நாய் என்ற ஒரு இனமாக மாறிவிட்டது. ஒரே தெரு நாய்கள் கூட்டமாக இருப்பதும் அவை மற்ற நாய்களை துரத்துவதும் ஓநாயின் குணத்திலிருந்து வந்ததே. மேலும் நாய் படுப்பதற்கு முன்பு ஒரு சுற்று சுற்றி உட்காருவதும் ஓநாய் குணத்தின் பதிவுகளே. ஏனெனில் ஓநாய்கள் அடர்ந்த புதர்களுக்கு நடுவே படுக்கும்போது ஒரு சுற்று சுற்றி உட்காரும் குணாதிசயத்தை கொண்டிருந்தன. இவ்வாறான சூழ்நிலைதகவமைதலில் இனங்கள் பிரிவதைப் பற்றி டார்வின் கூற்றுகளும் சொல்கின்றன.
தமிழில் வலப்புற தொகுப்பு முறையின் படி பறவைகள் மற்றும் விலங்குகளைப் பிரிக்கும்போது நவீன கால பிரிவுகளை கணக்கில் கொள்ளாமல் அவை எந்த இனமோ அதனையே மையப் பெயராக வைத்து வழங்கி இருக்கிறார்கள் மேலும் அதன் நிறம், தோற்றம், குணாதிசயங்களை அந்த மையப் பெயருடன் சேர்த்துப் பயன்படுத்துவதும் தமிழர்களின் பெயரிடுதல் முறையாக இருந்திருக்கிறது. உதாரணமாக குருவி என்பது இனம். அதிலேயே தவிட்டுகுருவி, சிட்டுகுருவி என்று பிரித்து வழங்கப்பட்டு இருக்கிறது மேலும் பொதுவாக இவைகள் குருவி என்றே வழங்கப்பட்டன. மேலும் கொக்கு, நாரை, குருகு மூன்றும் ஒரே இனத்தின் பிரிவுகளே. எனவே இந்தப் பறவைகளை இலக்கியத்தின் சில இடங்களில் பொதுவாகவே குறிப்பிட்டிருக்கின்றனர். இது ஒரு எளிமையான சிறப்பான வகைப்பாட்டு முறை. இந்த முறை சித்த மருத்துவத்தில் கூட பின்பற்றப் படுகிறது. உதாரணமாக சித்த மருத்துவத்தில் மருந்தை நெல்லிக்காய் அளவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பார்கள் இதுவும் ஒரு வலப்புற வகையிலான அளவீட்டு முறை. ஒரு நெல்லிக்காய் எவ்வளவு சிறிய அளவில் இருந்து எவ்வளவு பெரிய அளவில் இருக்குமோ அதற்கு இடைப்பட்ட அளவில் எந்த அளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்பது அதன் அர்த்தம் அதிகமாய்ப் போனால் எலுமிச்சை அளவாகிவிடும் குறைவாய்ப் போனால் மிளகு அளவாகிவிடும். எனவே அளவை நிர்ணயிப்பதில் சிரமம் இல்லை. ஆனால் அலோபதி மருந்துகளில் மில்லிகிராம் அளவு அதிகமானாலும் பக்கவிளைவுகள் உண்டு. இதே வலது புற தொகுப்பு சூட்சுமத்தை கொண்டே பழைய பறவை இனங்களையும் அவற்றின் அறிவியல் பெயர் வகைபாடுகளுடன் பழைய இலக்கியங்கள், நாட்டுப்புற வழக்கு ஆகியவற்றின் துணையுடன் பிரித்து ஒழுங்குபடுத்தி வரிசைக்கிரமமான பட்டியல்கள் தமிழ் குடிலால் உங்களுக்கு அளிக்கப்படும்.
0 comments:
Post a Comment