திருமுறை பரிசுப் போட்டி

12 Aug 2012

பொ.தி.ப. அறக்கட்டளையின் 
திருமுறை இசை மற்றும் திருமந்திர கட்டுரைப் போட்டி

மொத்த பரிசுத் தொகை ரூ.55,000




திருமுறை இசைப் போட்டி விதிமுறைகள்

  • போட்டியாளர்கள் தாங்கள் பாடவிரும்பும் பன்னிருதிருமுறைகளிலிருந்து பண் அமைந்த பாடல்களை மட்டுமே தேர்வு செய்யவேண்டும்.
  • போட்டியில் பங்கேற்கும் அனைவரும் தாங்கள்
    தேர்வு செய்த மூன்றுபாடல்களுடன் பெயர், முகவரி, தொடர்பு எண் மற்றும் இதர விவரங்களைநேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்பவேண்டும்.
  • ஓதுவார்கள் பாடசாலை இசைப்பள்ளி மற்றும் இசைக்கல்லூரி மாணவர்கள் தங்களின் அடையாள அட்டை நகலையோ அல்லது அதற்கு இணையான சான்றிதழ் நகலையோ இணைத்து அறக்கட்டளைக்கு அனுப்பவேண்டும்.
  • பொதுப் பிரிவில் பங்கேற்போர் தாங்கள் தேர்வு செய்து அனுப்பிய மூன்று பாடல்களை மட்டுமே பாடவேண்டும்.
  • பாடசாலை இசைப்பள்ளி மற்றும் இசைக்கல்லூரி மாணவர்கள் தாங்கள் தேர்வு செய்து அனுப்பிய மூன்று பாடல்களில் போட்டியன்று நடுவர்கள் கூறும் பாடல்களுடன் தாங்கள் விரும்பும் ஏதேனும் ஒரு திருப்புகழ் பாடலையும் பாடவேண்டும்.
  • ஓதுவார்கள் தாங்கள் தேர்வு செய்த அனுப்பிய மூன்று பாடல்களில் இரண்டு பண்ணுடனும் ஒரு பாடலை விருத்தமாகவும் அதனோடு தாங்கள் விரும்பும் ஏதேனும் ஒரு திருப்புகழ் பாடலையும் பாடவேண்டும்.
  • போட்டியில் பங்கேற்கும் மூன்று பிரிவினரும் தாங்கள் தேர்வு செய்த பாடலின் பண், இராகம், தாளம் மற்றும் பதிக வரலாற்றைக் குறிப்பிட்ட பின் அப்பாடலைப் பாடி பொருள் விளக்கம் தரவேண்டும்.
  • போட்டி நடைபெறும் 10 நாட்களுக்கு முன்பாகவே போட்டியாளர் எந்த நாளில் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்பதனை அறக்கட்டளையினர் தெரிவிப்பர் 

திருமந்திரக் கட்டுரைப்போட்டி விதிமுறைகள்

  • கீழே குறிப்பிட்டுள்ள திருமந்திர தலைப்புகளில் ஏதேனும் 1 அல்லது 2 தலைப்பினைத் தேர்வு செய்து 20 பக்கங்களுக்கு மிகாமல் பாடல் விளக்கம் மற்றும் மேற்கோளுடன் கட்டுரை அமைக்க வேண்டும்.

அரசாட்சி முறை, அறஞ்செயான் திறம், அறஞ்செய்வான் திறம்,  வேதச்சிறப்பு,திருமூலர் தம் வரலாறு கூறுதல், அன்பு செய்வாரை அறிவன் , சிவன், அன்புடைமை, இளமை நிலையாமை, உபதேசம், செல்வம் நிலையாமை, பிறன்மனை நயவாமை, மகளிர் இழிவு, யாக்கை நிலையாமை, அகத்தியம், அதோமுக தரிசனம், இலிங்கபுராணம், கரு உற்பத்தி, குரு நிந்தை, பெரியாரைத்துணைக்கோடல், மறைப்பு, அட்டமாசித்தி, ஆயுள் பரீட்சை, காயசித்தி உபாயம், தியானம்.

  • கட்டுரையின் விளக்கம் அவரவர் சொந்தகருத்தாக இருத்தல் வேண்டும். கையெழுத்து பிரதியில் முறையான கட்டுரை அமைப்பில் அனுப்புவோருக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும்
  • பெயர், முகவரி, தொடர்பு எண் ஆகியவற்றை கட்டுரையின் முதற்பக்கத்தில் இணைக்கவேண்டும். ஏனைய பக்கங்களில் கூடாது.
  •  ஒருவரிடமிருந்து ஒரு கட்டுரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
  • அனுப்பிய கட்டுரைகளை எந்தவித காரணத்திற்காகவும் திருப்பி அனுப்ப இயலாது.
  • மேலே குறிப்பிட்ட விதிமுறைகள்  20.10.2012 ஆம் தேதிக்குள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் மற்றவை நிராகரிக்கப்படும்

 இருபோட்டிகளுக்கான பொதுவான விதிமுறைகள்

  • வயது வரம்பு கிடையாது திருமுறை மற்றும் திருமந்திரத்தில் விருப்பம் உள்ள ஆண் பெண் இருபாலரும் போட்டியில் கலந்துகொள்ளலாம்.
  • போட்டியாளர்கள் மாற்றுத்திறனாளிகளாக இருப்பின் தங்களது சுயவிவரத்துடன் குறிப்பிடவும்.
  • திருமுறை இசைப் போட்டியில் பங்கேற்போருக்கும் திருமந்திரக் கட்டுரைப் போட்டியில் தேர்வாகும் அனைவருக்கும் பரிசளிப்பு விழா அன்று சான்றிதழ் வழங்கப்படும். பரிசளிப்பு விழா போட்டியாளர்கள் அனைவருக்கும் அறக்கட்டளை மூலம் பின்னர் தெரிவிக்கப்படும்
  •  நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது

மேலும் விவரங்களுக்கு : 91 9789197179, 91 9443249518, 0413 2251170

நாள் 2,3,4 நவம்பர் 2012
(வெள்ளி, சனி, ஞாயிறு)
இடம்
வேதபுரீஸ்வரர் கோயில் திருமணமண்டபம்
காந்திவீதி, புதுச்சேரி - 605001


போட்டியில் தமிழ்குடில் தடத்தின் வழி இணைய

கீழே உள்ள தொடர்பில் தங்கள் விவரங்களைப் பதிவு செய்து இணையவழி அனுப்பலாம். தகவல்கள் பொ.தி.ப அறக்கட்டளைக்கு அனுப்பப்படும். கட்டுரைப்போட்டியாளர்கள் தங்கள் கைப்பட எழுதிய கட்டுரைகளை pdf கோப்பாக இணைக்கவும். கட்டுரையின் முதல்பக்கத்திலும் தங்கள் சுய விவரங்களை இணைக்கவும்


0 comments:

Post a Comment

 
தமிழ் குடில் © 2011 | Designed by Tamilkudil