(எந்த ஒரு வியாபார நோக்கமுமில்லாத சேவை அமைப்பு )
விவசாயத் தகவல் மையம் :
புழுதியிலும் புழுதியாய் உள்ளவர்களின்
வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக....
வானகம், நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவத்தின் முயற்சி . எனவே
அனைவருக்கும் இந்த செய்தியை பகிர்ந்தும், தெரியப் படுத்தியும்
ஒத்துழைக்குமாறு
கேட்டுக் கொள்கிறோம்.
கேட்டுக் கொள்கிறோம்.
நோக்கம் :
வானகம் தகவல்மையத்தின் நோக்கம் தொலைபேசி வாயிலாகவோ அல்லது நேரிலோ
உங்களுக்கு வேண்டிய விவசாயம் மற்றும் வாழ்வியலுக்குத் தேவையான அனைத்து
தகவலையும் இலவசமாகவே அளித்து இயற்கை வழி வேளாண்மை மூலமாக நல்லதொரு சமூகத்தை
உருவாக்க நம்மாழ்வார் ஐயா மற்றும் அனுபவ விவசாயிகளின் துணை கொண்டு சமூக
பொறுப்புள்ள இளைஞர்களால் உருவாக்கப் பட்டுள்ளது.
இதில் உற்பத்தி முதல் விற்பனை வரை அனைத்து தகவல்களும் கிடைக்கும் படி உருவாக்கப் பட்டுள்ளது.
உதாரணமாக கீழ் கொடுக்கப் பட்டுள்ள தகவல்கள் :
- விதை விதைக்கும் மற்றும் நடமுறைபற்றிய தகவல்கள்
- பருவ கால விவசாய முறைகள்
- வறட்சியைத் தாங்கி, பூச்சிகளையையும் தாங்கும் பாரம்பரிய விதைகள் கிடைக்குமிடங்கள்
- நீர் பாய்ச்சும் முறைகள்
- இயற்கை உரங்கள் தயாரிக்கும் முறைகள்
- பூச்சிகளை கட்டுப் படுத்தும் எளிய நுட்பங்கள்
- பயிர் அறுவடை
- உமி நீக்குதல் மற்றும் மர செக்கு போன்ற மதிப்பு கூட்டும் நுட்பங்களும் அதற்கான வழிகாட்டுதல்களும்..
- நுகர்வோருக்கோ அல்லது பசுமை அங்காடிகளுக்கோ பொருள்களை விற்பனை செய்யவும் தேவையான தகவல்கள்
- எந்த வகையான மரங்கள் நடுவது எதிர்காலத் தேவைக்கு சிறந்தது, மரக்கன்றுகள் கிடைக்குமிடம் மற்றும் மாதிரி பண்ணைகள் போன்ற தகவல்களும்
- பண்ணை வடிவமைப்பு, மழை நீர் சேகரிப்பு, ஒருங்கிணைந்த பண்ணை உருவாக்கம் போன்ற தகவல்களும்
- அனுபவ விவசாயிகளின் பண்ணைகள்
- பயிற்சிகள் மற்றும் விழிப்புணர்வு கூட்டங்கள்
- மானியம் & சிறப்புத் திட்டம் போன்ற தகவலுக்கு வேளாண் அலுவலகங்களின் முகவரிகள்
- மதிப்புக் கூட்டி பொருள்களை சந்தப் படுத்த
- மாடித்தோட்டம் மற்றும் உங்கள் வீடு மற்றும் பொது இடங்களில் மரம் நடுதல் போன்ற பல தகவல்கள் கிடைக்கும்.
வலுப் படுத்த:
மேலும் இந்த விவசாயத் தகவல் மைய சேவையை வலுப்படுத்த நீங்களும் இதில்
உறுப்பினராகி உங்கள் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு என்ன தேவை என்பதை கூற
வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் நீங்கள் அனுபவ
விவசாயி அல்லது மற்றவருக்கு இலவச ஆலோசனை அளிக்க விரும்பினாலோ அல்லது
உங்களுடைய பொருளை சந்தப் படுத்த வேண்டுமானலோ எங்களுடைய தலைமை தகவல் மையத்தை
தொடர்புகொள்ளுங்கள்.
முதல் கட்டமாக 7 மாவட்டங்களில்
விவசாயத் தகவல் மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. ஆகவே அந்தந்த மாவட்ட மக்கள்
அங்குள்ள விவசாயத் தகவல் மையங்களில் உங்களை இணைத்துக் கொள்ள வேண்டுகிறோம்.
மாவட்ட விவசாயத் தகவல் மையங்களின் தொலைபேசி எண்கள் :
1.விருதுநகர் மாவட்டம் , முத்துக்குமார் : 97876 48002 , 94435 75431
2. திருநெல்வேலி மாவட்டம் , எசக்கி : 95517 26956, 94435 75431
3. தூத்துக்குடி மாவட்டம் , ஹரிஹரவயனன் : 90925 79798, 94435 75431
4. இராமநாதபுரம் மாவட்டம் , ஏகாம்பரம் : 90959 74287, 94435 75431
5. பெரம்பலூர் மாவட்டம் , தெய்வசிகாமணி : 81448 93720, 94435 75431
6. விழுப்புரம் ( புதுவை) மாவட்டம் , சரவணன் : 94888 29993, 94435 75431
7. நீலகிரி மாவட்டம் , மகா மகா பெல்லியப்பன் : 90472 65172 . 94435 75431
மற்ற மாவட்டங்கள் & தலைமை விவசாயத் தகவல் மையம்:
ஜெ. கருப்பசாமி : 94435 75431 , ஏங்கல்ஸ் ராஜா : 94421 21473
Email : karuppasamy2k09@gmail.com
(குறை/ நிறைகளை பதிவு செய்யும் படி கேட்டுக்கொள்கிறோம். ஏனெனில் அது சேவையை மேம்படுத்த உதவும்.)
மற்ற மாவட்டங்களிலும் விரைவில் தொடங்கப்படும்.
உங்கள் பகுதிகளிலும் விவசாயத் தகவல் மையங்கள் அமைக்க தலைமை விவசாயத் தகவல் மையத்தை தொடர்பு கொள்ளுங்கள்
நன்றி : எங்களுடைய லட்சியப் பயணத்தில் இனைந்துள்ள tamilkudil.org இணைய தளம் நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் வானகம் ( நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம் ) சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இந்த செய்தியை அனைவருக்கும் பகிர்ந்து விவசாய பெருமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவோமாக....